எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின் கோவிட் நிவாரண நிதிக்கு எஸ்.ஜே.வி.என். ரூ.5 கோடி அளிக்கிறது
Posted On:
30 MAR 2020 4:48PM by PIB Chennai
மத்திய அரசின் மின்சாரத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படும் பட்டியல் - `A'
மத்திய பொதுத்துறை நிறுவனமும், மினி ரத்னா நிறுவனமுமான எஸ்.ஜே.வி.என். லிமிடெட் நிறுவனம், கோவிட் 19க்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளது. வேகமாகத் தொற்றும் தன்மையுள்ள இந்த கோவிட்-19 நோய் ஒட்டுமொத்த உலகையே அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்கு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் சுகாதாரம் மற்றும் பொருளாதார சவால்கள் ஏற்பட்டுள்ளன.
பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனம் என்ற வகையிலும், கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளின் தீவிர அவசியத்தைப் புரிந்து கொண்ட வகையிலும், PM CARES நிதிக்கு எஸ்.ஜே.வி.என். நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. நந்தலால் ஷர்மா தெரிவித்துள்ளார்.
************
(Release ID: 1609310)
Visitor Counter : 76