பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

சர்க்கரை ஆலைகள் கரும்பிற்காக செலுத்தும் “நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலை” நிர்ணயத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 24 JUL 2019 4:17PM by PIB Chennai

 

      2019-20 ஆம் ஆண்டு பருவத்தில், சர்க்கரை ஆலைகள் கரும்பிற்கு செலுத்த வேண்டிய “நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலை” நிர்ணயம் செய்யும் திட்டத்திற்கு பிரதமர்  திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.

      சென்ற 2018 ஆகஸ்ட் மாதத்தில், வேளாண் விலைகள் மற்றும் கட்டணங்களுக்கான ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்    2019-20 பருவத்திற்கான கரும்பு விலைக் கொள்கை அமையும். 2018-19 பருவத்திற்கு அளிக்கப்பட்ட அதே விலையே இந்தப் பருவத்திற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

     

*****



(Release ID: 1580109) Visitor Counter : 96