நிதி அமைச்சகம்
பிரதமரின் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவை எட்டுவதற்கு பொருளாதார ஆய்வறிக்கையில் உத்தி பூர்வ அச்சுப் படிவம் (புளூ பிரிண்ட்).
Posted On:
04 JUL 2019 12:30PM by PIB Chennai
2025-க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் கனவை நனவாக்கும் வகையில் பொருளாதார ஆய்வறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
“வேகத்திற்கான பற்சக்கரங்களை மாற்றியமைத்தல்” என்ற மையப் பொருளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் நோக்கம் 2024-25 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவதாகும். #பொருளாதாரம்@5 டிரில்லியன் டாலர் என்ற கனவை சாதிக்க, இந்தியா தனது வேகத்தைக் கூட்டி, 8 சதவீத ஜிடிபி வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி, தேவை, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது ஆகியவற்கை தனித்தனி பிரச்சனைகளாகப் பார்ப்பதைவிட, இந்த ஆய்வறிக்கை இவற்றை ஒன்றுக்கொன்று உதவும் கூறுகளாகக் கருதுகிறது. 2018-19 ஆம் ஆய்வறிக்கை, ‘blue sky thinking’ எனப்படும் புதிய யோசனைகளை கண்டறியும் வழியைப் பின்பற்றி உள்ளது. இந்தியாவுக்கு ஏற்ற பொருளாதார மாதிரியை அமைக்க இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை தடையற்ற அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.
உறுதியற்ற உலகுக்கு மூன்று முக்கிய கூறுகள் தேவை: அவை தொலைநோக்குப் பார்வை, அதை அடைவதற்கான புளூ பிரிண்ட் அதில் உள்ள ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கருவிகளை தொடர்ந்து சூழ்நிலைக்கேற்ப மாற்றி அமைப்பது ஆகும்.
*******
(Release ID: 1577159)