மத்திய அமைச்சரவை

இந்தியா – கொரியா குடியரசு இடையே கூட்டாக அஞ்சல்தலை வெளியிடுவது தொடர்பாக அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 15 APR 2019 12:34PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய  அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாகொரியா குடியரசு இடையே பிப்ரவரி 2019ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 
இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையும், கொரிய குடியரசும் இணைந்து"கொரியாவின் ராணி ஹூ ஹேவாங்-ஓக்"  என்ற தலைப்பிலான அஞ்சல் தலை ஒன்றை வெளியிட பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளன. 
இந்த கூட்டு அஞ்சல் தலைகள், 2019 இறுதியில்,  இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் தேதியில் வெளியிடப்படும்.

 

                                  *******


(வெளியீட்டு அடையாள எண்: 1570640) வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati