மத்திய அமைச்சரவை

இந்தியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையே பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு செயல்பாட்டுக்குழு அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 FEB 2019 9:30PM by PIB Chennai

இந்தியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையே பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு செயல்பாட்டுக்குழு அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையேயான கூட்டு செயல்பாட்டுக்குழு உதவியாக இருக்கும். எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தம் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும் அடிப்படையாக அமையும்.

 

                                                                        ******



(Release ID: 1564399) Visitor Counter : 119