மத்திய அமைச்சரவை
சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
01 NOV 2018 11:42AM by PIB Chennai
சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள்கள்:
- சுற்றுலா துறையில் இருதரப்பு உறவினை விரிவுபடுத்துதல்
- சுற்றுலா தொடர்பாக உள்ள தகவல்கள் மற்றும் தரவுகளின் பரிமாற்றத்தை அதிகரித்தல்
- ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுற்றுலா துறை பங்குதாரர்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துதல்
- ஒத்துழைப்பிற்காக மனித வள மேம்பாட்டுத் துறையில் பரிமாற்ற திட்டங்களை உருவாக்குதல்
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முதலீடுகளை ஊக்கப்படுத்துதல்
- இரு-வழி சுற்றுலாவை ஊக்கப்படுத்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்/ பத்திரிகையாளர்கள்/ திறனாய்வாளர்கள் ஆகியவர்களை இருநாடுகளையும் பார்வையிட செய்தல்
- விளம்பரம், சுற்றுலா தளங்களின் மேம்பாட்டை சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மை குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்.
- இரு நாடுகளிலும் நடைபெறும் சுற்றுலா கண்காட்சிகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல்
- பாதுகாப்பான, கௌரவமான மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவித்தல்
*****
(Release ID: 1551506)
Visitor Counter : 182