மத்திய அமைச்சரவை

பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்துறை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் தென் கொரியா இடையே உள்ள கூட்டுறவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 26 SEP 2018 4:09PM by PIB Chennai

பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்துறை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் தென் கொரியா இடையே உள்ள கூட்டுறவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தென் கொரியா அதிபர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஜூலை 9, 2018 அன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புது தில்லியில் கையழுத்திடப்பட்டது. 

நிலையான வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழித்துறை தொழிநுட்பம் ஆகிய துறைகளில் உள்ள இருத்தரப்பு உறவை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

*********



(Release ID: 1547377) Visitor Counter : 97