பிரதமர் அலுவலகம்

சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியினர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 08 JUN 2018 12:25PM by PIB Chennai

மத்திய உணவுப் பதனீட்டுத் தொழில்கள் துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையிலான குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (ஜூன் 8) சந்தித்தனர். அக்குழுவில் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றனர்.

மத்திய அரசு சேவை விருந்து திட்டத்தைச் (Seva Bhoj Yojna) செயல்படுத்துவதற்காகவும் அத்திட்டத்திற்கான உணவுப் பொருட்கள், பிரசாதங்கள் மீதான ஒருங்கிணைந்த மற்றும் மத்திய சரக்குகள் மற்றும் சேவை வரிகளில் (IGST & CGST)  மத்திய பங்கு திருப்பித் தரப்படுவதற்கும் பிரதமருக்கு அந்தக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். இந்த உணவுப் பண்டங்களையும், பிரசாதங்களையும் குருத்வாரா உள்ளிட்ட பல்வேறு சமய அறக்கட்டளை நிறுவனங்கள் இலவசமாக மக்களுக்கு வழங்குகின்றன.

கரும்பு விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்ததற்காக பிரதமருக்கு அந்தக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

 

***



(Release ID: 1534897) Visitor Counter : 174