குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 4:27PM by PIB Chennai

விநாயகர் சதுர்த்தியையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:

"புனிதமான விநாயகர் சதுர்த்தி நன்னாளில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விநாயகப் பெருமான் ஞானம், செழிப்பு, மங்களகரமான தொடக்கம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறார். விநாயகர் சதுர்த்திப் பண்டிகை நம் வாழ்வில் ஆற்றலையும், அறிவையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டுவருகிறது. இந்தப் புனிதமான பண்டிகை, வாழ்க்கையில் புதிய தீர்மானங்களுடன் முன்னேற்றப் பாதையில் முன்னோக்கிச் செல்ல நம்மை ஊக்குவிக்கிறது.

விநாயகப் பெருமான் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் பங்களிப்போம் என்று உறுதியேற்போம்."

***

(Release ID: 2309745)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309829) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Kannada