பிரதமர் அலுவலகம்
கப்பல் கட்டுமானம், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தளவாடப் போக்குவரத்தில் கூட்டாண்மைக்கான இந்தியா-கொரியா விரிவான செயல்திட்டம்
प्रविष्टि तिथि:
20 APR 2026 10:51PM by PIB Chennai
2026 ஏப்ரல் 20 அன்று கொரியக் குடியரசின் அதிபர் திரு லீ ஜே மியுங் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார், அப்போது பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் நடைபெற்ற சந்திப்பில், கப்பல் கட்டுமானம், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தளவாடப் போக்குவரத்தில் கூட்டாண்மை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளுக்கு இடையேயான பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.
இந்தியாவும் கொரியக் குடியரசும் வளமான கடல்சார் பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகளாகும். மேலும், கடல்சார் தொழில்கள் துறையில் பரந்த பொதுவான நலன்களையும், பலங்களையும் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் பொருளாதாரத்தின் சர்வதேசமயமாக்கலுடன், கடல்சார் துறை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
முன்னணி கப்பல் கட்டும் மற்றும் கடல்சார் திறன்களைக் கொண்ட நட்பு நாடான தென் கொரியாவுடன் நீண்டகால ஒத்துழைப்பிற்கு, கடல்சார் அமிர்த காலம் 2047 என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்தியாவின் கடல்சார் இலக்குகள் கணிசமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். கப்பல் கட்டுதல், துறைமுக மேம்பாடு, கடல்சார் தளவாடப் போக்குவரத்து ஆகியவற்றில் ஒத்துழைப்பு, இந்தியா-தென் கொரிய சிறப்பு கூட்டாண்மையை இரு நாடுகளுக்கும் நடைமுறைப் பலன்களையும் பொருளாதார மதிப்பையும் நோக்கி வழிநடத்த முடியும். அதே நேரத்தில், இரு நாட்டு மக்களிடையே ஆழமான புரிதலையும் கூட்டாண்மையையும் உருவாக்கும்.
அந்நாட்டில் பெரிய அளவிலான புதிய கப்பல் கட்டும் மையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், இந்திய அரசின் கப்பல் கட்டும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் சலுகைகள், அத்துடன் தொடர்புடைய மாநில அரசுகள் மற்றும் இந்திய நிதி நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் குறித்தும் இந்தியத் தரப்பு, தென் கொரியத் தரப்பிற்கு விளக்கமளித்தது. வடிவமைப்பு, உற்பத்திப் பொறியியல், மேம்பட்ட உற்பத்தி, தரம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் தீவிரமாகப் பங்கேற்பதற்கு, தென் கொரிய முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு இந்தியத் தரப்பு அழைப்பு விடுத்தது. வணிகத் துறையின் பங்கேற்பின் அடிப்படையில் ஒத்துழைப்பு மேம்படும் என்று தென் கொரியத் தரப்பு எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது.
இதன் பொருட்டு, தென்னிந்தியாவில் ஒரு பெரிய புதிய கப்பல் கட்டும் தளத்தை கூட்டாக மேம்படுத்துதல், நிதியளித்தல், செயல்படுத்துதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்காக, அடையாளம் காணப்பட்ட கிளஸ்டர் மேம்பாட்டாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான கொரிய கப்பல் கட்டும் நிறுவனமான எச்டி கொரியா ஷிப்பிங் & ஆஃப்ஷோர் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் மூலதன வழங்குநரான கடல்சார் மேம்பாட்டு நிதியம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சட்டப்பூர்வமற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அவர்கள் நம்பினர்.
இந்தியா கடல்சார் வாரம் 2025-ன் போது, இந்தியாவில் உள்ள பொது நிறுவனங்கள் மூலம் மட்டும், வரும் காலத்தில் ரூ. 2.2 லட்சம் கோடி (சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்) மொத்த மதிப்பில் 400-க்கும் மேற்பட்ட கப்பல்களை வாங்கும் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253976®=3&lang=1
***
SS/PKV/KR
(रिलीज़ आईडी: 2288739)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam