மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த புவி அறிவியல் நிபுணர் தேர்வு 2025- முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 15 JUL 2026 8:56AM by PIB Chennai

ஒருங்கிணைந்த புவிஅறிவியல் நிபுணர் தேர்வு 2025-க்கான முடிவுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம்   வெளியிட்டுள்ளது. அதன்படி 80 பேர் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுரங்க அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் கீழ், 16 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.  இதில் ‘பி’ பிரிவு  விஞ்ஞானி (நீர் புவியியல்), குரூப் ‘ஏ’ / உதவி நீர் புவியியலாளர், குரூப் ‘பி’ பணிக்கு 13 பேர் (பொது பிரிவினர் 4, ஓபிசி 7, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் 1, எஸ்சி 1) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புவி இயற்பியலாளர், குரூப் ‘ஏ’ / பி’ பிரிவு  விஞ்ஞானி (புவி இயற்பியல், குரூப் ‘ஏ’ / உதவி புவி இயற்பியலாளர், குரூப் ‘பி’ பணிக்கு 3 பேர் (பொதுப்பிரிவினர் 2, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் 1) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களுக்கு சுரங்க அமைச்சகம், நேரடியாக தகவல் அளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284688&reg=3&lang=1

***

 

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2284754) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu