சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உயரமான மலைப்பகுதியில் பொது சுகாதார ஆராய்ச்சி மையம் - கீலாங்கில் 11-ம் தேதி மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா அடிக்கல் நாட்டுகிறார்
प्रविष्टि तिथि:
09 JUL 2026 12:41PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, இமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல் - ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில், நாளை மறுநாள் (2026 ஜூலை 11), நாட்டின் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்படும் மருத்துவ- பொது சுகாதார ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் (ஐசிஎம்ஆர்) அமைக்கப்படும் இந்த மையம், கீலாங்கில் உள்ள ஐசிஎம்ஆர்-ன் தற்போதைய மையத்தை, ஆராய்ச்சி, புத்தாக்கம், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒரு முழுமையான, பல்துறை மையமாக மேம்படுத்தும்.
இமயமலைச் சூழலமைப்பு, அதிக உயரம், தீவிரமான பருவநிலை சூழல்கள், கடினமான நிலப்பரப்பு போன்ற தனித்துவமான பொது சுகாதார சவால்கள் இப்பகுதியில் உள்ளன. நோய்களின் தன்மை, சுகாதார அணுகல், அவசரகால சிகிச்சை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. கீலாங் மையம், பரந்த அளவிலான ஆராய்ச்சிப் பிரிவுகளில் சூழலுக்கு ஏற்ற அறிவியல் சான்றுகளையும், தீர்வுகளையும் உருவாக்கும்.
ஜூலை 11-ம் தேதி நடைபெறும் விழாவில், இப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்புத் துறைச் செயலாளர், இமாச்சலப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர், மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282741®=3&lang=1
***
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2283026)
आगंतुक पटल : 14