சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மேம்பட்ட செல் மற்றும் மரபணு சிகிச்சைகளுக்கு சீரான ஒழுங்குமுறையை உறுதி செய்வதற்காக, மருந்து விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
02 JUL 2026 5:24PM by PIB Chennai
மேம்பட்ட, வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பங்களின் மீதான ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, செல் அல்லது ஸ்டெம் செல்லிலிருந்து பெறப்பட்ட பொருட்கள், மரபணு சிகிச்சை பொருட்கள், செனோகிராஃப்ட்ஸ் ஆகியவற்றை மத்திய உரிமம் வழங்கும் அதிகாரசபை கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்காக, மத்திய அரசு 1945-ம் ஆண்டு மருந்து விதிகளைத் திருத்தியுள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் மருத்துவ அறிவியலின் மிகவும் சிக்கலான, சிறப்பு வாய்ந்த, வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக இருப்பதால், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றுக்கு மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கண்காணிப்பு தேவைப்படுகிறது.
இந்தத் தயாரிப்புகளை மத்திய உரிமம் வழங்கும் அதிகாரசபை கட்டமைப்பின் கீழ் சேர்ப்பது, மேற்பார்வை முறையை எளிதாக்கும். இதன் மூலம் நாடு முழுவதும் ஒழுங்குமுறைத் தரங்களில் சீரான தன்மை உறுதி செய்யப்படும்.
இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை பின்வரும் இணைப்பில் அணுகலாம்: https://egazette.gov.in/(S(t3khz0ekbif5wgz2z23i0zvb))/ViewPDF.aspx
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280408®=3&lang=1
(Release ID: 2280408)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280535)
आगंतुक पटल : 8