பிரதமர் அலுவலகம்
யோகா, ஆரோக்கியமான முதுமை குறித்த கட்டுரை ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 JUN 2026 8:07PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுதிய கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
வலிமையான, மேம்பட்ட தேசத்தைக் கட்டமைக்க, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் குடிமக்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், சிறந்து விளங்குவதையும் உறுதி செய்வதன் அவசியத்தை இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது. இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தின் அடிப்படையில் அமைந்த யோகா, ஆரோக்கியத்திற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை முன்வைப்பதுடன், ஆரோக்கியமான முதுமையை ஆதரிக்கும் வாழ்நாள் துணையாகவும் திகழ்கிறது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“2026 சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட உலகம் தயாராகி வரும் நிலையில், ஒரு வலிமையான, வளர்ந்த தேசத்தை உருவாக்க, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் குடிமக்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், சிறந்து விளங்குபவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தை மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தில் வேரூன்றிய யோகா, ஆரோக்கியத்திற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குவதுடன், ஆரோக்கியமான முதுமையை ஆதரிக்கும் வாழ்நாள் துணையாகவும் விளங்குகிறது என்பதை அவர் வலியுறுத்துகிறார்.”
(Release ID: 2272733)
***
SS/BR/PD
(रिलीज़ आईडी: 2274049)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam