பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாமனில் வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் தாம் ஆற்றிய உரையின் சில முக்கியப் பகுதிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 05 JUN 2026 10:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி டாமனில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் தாம் ஆற்றிய உரையின் சில பகுதிகளைப் பகிர்ந்துகொண்டு, பிராந்திய வளர்ச்சியையும் தேசிய முன்னேற்றத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

 

"டாமனில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பால் நான் நெகிழ்ச்சி அடைந்தேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு டாமன் - டையூவின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கியுள்ளது. பல்வேறு திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன."

 

"தூய்மை தொடர்பான சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட டாமன் மக்களை நான் பாராட்ட விரும்புகிறேன். தூய்மை மேலும் மேம்படுத்தப்படும்போது, அது சுகாதாரம் முதல் சுற்றுலா வரையிலான பல்வேறு துறைகளுக்கு ஊக்கமளிக்கிறது."

 

"இந்த உலகளாவிய நெருக்கடி காலத்தில், 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியால் இந்தியா தன்னைத் தானே பாதுகாத்து வருகிறது."

 

"தாத்ரா - நகர் ஹவேலி,  டாமன் - டையூ ஆகிய பகுதிகளில் வளர்ச்சிக்கு எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் முன்னேற்றக் கனவை நனவாக்க எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது."

 

"நாட்டின் இளைஞர்கள் பட்டங்களை மட்டுமல்லாமல், எதிர்காலம் குறித்து சரியான வழிகாட்டுதலையும் பெறுவதை எங்கள் அரசு உறுதிசெய்ய முயல்கிறது. எனவே, உள்ளூர் திறமையாளர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில், ஒவ்வொரு துறையிலும் ஒரு புதிய அணுகுமுறையுடன் அவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள்."

 

(Release ID : 2269647)

***

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2269729) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Malayalam