இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2026 12:36PM by PIB Chennai

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தத் திருத்தங்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், அங்கீகரிக்கப்படாத விற்பனை மற்றும் விநியோகம், ஊக்கமருந்து பயன்பாட்டிற்காக விளையாட்டு வீரர்களுக்கு தடை செய்யப்படட் பொருட்களை வழங்குதல், சிறார்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்குதல், ஊக்கமருந்துடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், பரிந்துரைக்கப்பட்ட குறியீடுகள் இல்லாமல் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல், ஊக்கமருந்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள், கட்டண விளம்பரங்கள் போன்ற நடவடிக்கைகளை குற்றமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் ஊக்கமருந்து கட்டமைப்புகளில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரர்கள், சட்டவிரோத விநியோகஸ்தர்கள், குழுக்கள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகளை கொண்டுள்ளது. 

முக்கியமாக கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து தடுப்பு விதி மீறல்கள் அல்லது நேர்மறை சோதனை முடிவுகளிலிருந்து மட்டும் குற்றவாளிகளாக கருதப்பட மாட்டார்கள். விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து தடுப்புவிதி மீறல்கள், தற்போதுள்ள ஊக்கமருந்து தடுப்புக் கட்டமைப்பின் கீழ் தொடர்ந்து கையாளப்படும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263604&reg=3&lang=1

***

SS/IR/KPG/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2263766) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam