பிரதமர் அலுவலகம்
அசாமின் குவஹாத்தியில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2026 10:54AM by PIB Chennai
அசாமின் குவஹாத்தியில் சுமார், ரூ 19,480 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குவஹாத்தியில் நடந்த ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தில் பிரதமர் உரையாற்றி, மக்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நாடு முழுவதும் இருந்து கலந்துகொண்ட விவசாயிகளையும், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் சகோதர சகோதரிகளையும் அவர் வாழ்த்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தொடர்ச்சியான பதிவுகளில் திரு மோடி பின்வருமாறு கூறியுள்ளார்:
“கோக்ராஜார் புகழ்பெற்ற போடோ கலாச்சாரத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டது. இப்பகுதியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கும் போது, காணொலி மூலம் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினேன்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240073®=3&lang=1
***
TV/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2240104)
வருகையாளர் எண்ணிக்கை : 8