ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

871 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2026 5:18PM by PIB Chennai

உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் ரூ.871 கோடி மதிப்பிலான முக்கிய திட்டப் பணிகளுக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

எதிர்காலத்திற்கு தேவையான அதிக திறன் கொண்ட ரயில் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு உத்திசார் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் ரயில் பெட்டி பராமரிப்பதற்கான சூழல் அமைப்புகளை நவீனமயமாக்குதல், அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட வழித்தடங்களைக் குறைத்தல், செயல்பாட்டிற்கான தடைகளை நீக்குதல், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்கான திறனை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பிராந்தியத்தில் வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் அதிகரித்து வரும் பராமரிப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், அம்மாநிலத்தில் உள்ள லால்கரில் பயிற்சி பராமரிப்பு வசதிகளை ரூ.139.6820 கோடி செலவில் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233140&reg=3&lang=1

***

AD/SV/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2233213) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Kannada , Malayalam