PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வலுப்படுத்தப்பட்ட விளையாட்டு சூழல் அமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 12:08PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த  பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இளைஞர் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தேசிய விருப்பத்தின் முக்கிய தூணாக விளையாட்டு உருவெடுத்துள்ளது. ஒழுக்கமான, ஆரோக்கியமான மற்றும் திறமையான குடிமக்களை வடிவமைப்பதில் விளையாட்டுகளின் உருமாற்றத்  திறனை அங்கீகரித்து, இந்திய அரசு இந்தத் துறைக்கான கொள்கை மற்றும் நிறுவன ஆதரவை தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளது.

2026–27 மத்திய பட்ஜெட், நீண்டகால தேசியத் திறன் மேம்பாட்டிற்கான கட்டமைப்பிற்குள் விளையாட்டை உறுதியாக வைப்பதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம், நிலையற்ற உலகளாவிய இயக்கவியலுக்கு மீள்தன்மையை உருவாக்குவதன் மூலம், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நிலைநிறுத்தவும், நமது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மத்திய பட்ஜெட் உரையில் கூறியதாவது:

"விளையாட்டுத் துறை வேலைவாய்ப்பு, திறன் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான பல வழிகளை வழங்குகிறது. கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ள விளையாட்டுத் திறமையாளர்களின் முறையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அடுத்த பத்தாண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றுவதற்காக கேலோ இந்தியா இயக்கத்தை தொடங்க நான் முன்மொழிகிறேன்."

இந்த நடவடிக்கை பட்ஜெட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இரண்டாவது கடமையுடன் ஒத்துப்போகிறது. வளர்ச்சியைடந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2026-ன் புதுமையான யோசனைகளால் ஈர்க்கப்பட்டு, இந்த தனித்துவமான இளைஞர்  சக்தியால் இயக்கப்படும் பட்ஜெட் இளைஞர்களின் ஆற்றலையும் தொலைநோக்குப் பார்வையையும் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு வழி வகுக்கிறது.

2026–27 மத்திய பட்ஜெட்டில், அடுத்த பத்தாண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றியமைப்பதற்காக கேலோ இந்தியா இயக்கம் தொடங்கப்படுவதாக அரசு அறிவித்தது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்கனவே தொடங்கப்பட்ட விளையாட்டுத் திறமையாளர்களின் முறையான வளர்ப்பை முன்னெடுத்துச் செல்லும் இந்த இயக்கம், நாட்டில் விளையாட்டு மேம்பாட்டிற்கான நீண்டகால, விரைவான அணுகுமுறையை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.

2016-17 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க நிதி வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது இந்தியா முழுவதும் விளையாட்டுகளில் வெகுஜன பங்கேற்பு மற்றும் சிறப்பை ஊக்குவிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த திட்டம் விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதையும் நாடு முழுவதும் விளையாட்டு சிறப்பை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது நாடு முழுவதும் விளையாட்டு பங்கேற்பை ஊக்குவிக்கிறது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வளர்ச்சி, சமூக மேம்பாடு, சமூக ஒருங்கிணைப்பு, பாலின சமத்துவம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தேசிய பெருமை மற்றும் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பொருளாதார வாய்ப்புகளுக்கு விளையாட்டின் முழுமையான செல்வாக்கைப் பயன்படுத்துகிறது.

கேலோ இந்தியா இயக்கத்துடன், 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்திக்கான ஒரு பிரத்யேக முயற்சியை அறிவித்துள்ளது, இதற்கு ரூ 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி உயர்தர விளையாட்டுப் பொருட்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாவதற்கான திறனை அங்கீகரிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229477&reg=3&lang=1

***

AD/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229810) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Gujarati