குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2026 8:30AM by PIB Chennai

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாதுகாப்புப் படையினரின் உச்சபட்ச தியாகம் நாட்டின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

அவர்களின் தியாகம், நாட்டின் ஒவ்வொரு நபரையும் வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதற்கு தொடர்ந்து ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2227897)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2228206) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada , Malayalam