குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சத்திஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் பஸ்தர் திருவிழா 2026-ஐ குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2026 3:35PM by PIB Chennai

சத்திஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் பஸ்தர் திருவிழா 2026-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 7, 2026)  தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்வில் பேசிய குடியரசுத்தலைவர், விவசாயிகள் இந்த வளமான நிலத்தில் விதைகளை விதைப்பது ஒரு விழா என்றும், மாம்பழப் பருவம் வரும்போது அது ஒரு விழா என்றும் கூறினார். பஸ்தர் மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கொண்டாடுகிறார்கள். இந்த வாழ்க்கை முறையை பஸ்தர் மக்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

பஸ்தரின் மரபுகளும் கலாச்சாரமும் எப்போதும் மக்களை ஈர்த்துள்ளன என்று கூறிய குடியரசுத்தலைவர். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பகுதி நான்கு தசாப்தங்களாக மாவோயிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.  இதன் விளைவாக, இங்குள்ள மக்கள், குறிப்பாக  இளைஞர்கள், பழங்குடியினர் மற்றும் தலித் சகோதர சகோதரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆனால், மாவோயிஸ்ட் தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட தீர்க்கமான நடவடிக்கையால், பல ஆண்டுகளாக நிலவிய பாதுகாப்பின்மை, பயம் மற்றும் அவநம்பிக்கையின் சூழல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. மாவோயிசத்துடன் தொடர்புடையவர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, மக்களின் வாழ்க்கையில் அமைதியை மீண்டும் கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பஸ்தரில் வளர்ச்சியின் புதிய விடியல் தோன்றி வருவதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மின்சாரம், சாலைகள் மற்றும் தண்ணீர் வசதிகள் கிடைத்து வருகின்றன. பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, குழந்தைகள் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு சித்திரம் என்றும், இது அனைத்து குடிமக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் அவர் கூறினார்.

தனிநபர் மற்றும் சமூக மேம்பாட்டின் அடித்தளமாக கல்வி உள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். பழங்குடியினப் பகுதிகளில் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன, இதனால் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற முடியும். அனைத்து பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சத்தீஸ்கர் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் இப்படித்தான் பிரகாசமாக மாறும் என்று அவர் கூறினார்.

***

(Release ID: 2224877)

TV/SMB/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2225036) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam