பிரதமர் அலுவலகம்
மகள்களின் மதிப்பையும் வலிமையையும் எடுத்துக்காட்டும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
22 JAN 2026 9:26AM by PIB Chennai
மகள்களை லட்சுமியாக மதிக்கும் நாட்டில், 11 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் பெண் குழந்தையைப் பாதுகாப்போம் பெண் குழந்தையைப் படிக்கவைப்போம் இயக்கம் தொடங்கப்பட்டது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி, கூறியுள்ளார். இன்று இந்தியாவின் மகள்கள் அனைத்துத் துறைகளிலும் புதிய சாதனைகள் படைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்வது மிகவும் பெருமைக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகள்களின் முக்கியத்துவம் குறித்து காலத்தால் அழியாத இந்திய நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்-
“दशपुत्रसमा कन्या दशपुत्रान् प्रवर्धयन्। यत् फलम् लभते मर्त्यस्तल्लभ्यं कन्ययैकया॥”
ஒரு மகள் பத்து மகன்களுக்குச் சமம் என்றும், பத்து மகன்களிடமிருந்து ஒரு நபர் அடையும் தகுதி அல்லது மதிப்பை ஒற்றை மகளிடமிருந்து அடைய முடியும் என்றும் இந்த ஸ்லோகம் கூறுகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“कन्या को लक्ष्मी मानने वाले हमारे देश में 11 साल पहले आज ही के दिन बेटी बचाओ बेटी पढ़ाओ अभियान की शुरुआत हुई थी। यह बड़े गर्व की बात है कि आज भारत की बेटियां हर क्षेत्र में नित-नए रिकॉर्ड बना रही हैं।
दशपुत्रसमा कन्या दशपुत्रान् प्रवर्धयन्।
यत् फलम् लभते मर्त्यस्तल्लभ्यं कन्ययैकया॥”
***
(Release ID: 2217141)
AD/SMB/KR
(रिलीज़ आईडी: 2217194)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam