கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு சீர்திருத்தங்கள் குறித்து தேசிய அளவிலான பயிலரங்கம் உதய்பூரில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 10 JAN 2026 12:45PM by PIB Chennai

கூட்டுறவு மூலம் வளம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவது குறித்த இரண்டு நாள் தேசிய அளவிலான பயிலரங்கும் ஆய்வுக் கூட்டமும் 2026 ஜனவரி 8-9 தேதிகளில் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்றது.  மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் துடிப்பான தலைமையின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், நாடு முழுவதும் அவற்றின் பொருளாதார தடத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான சீர்திருத்தங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கில், கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள், பதிவாளர்கள் உட்பட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு முழுவதிலுமிருந்து முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தப் பயிலரங்கத்தை கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூட்டானி தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் அரசின் கூட்டுறவுத் துறைச் செயலாளர் திருமதி ஆனந்தி பிரதிநிதிகளை வரவேற்று உரையாற்றினார்.

கூட்டுறவு அமைச்சக செயலாளர் தமது சிறப்புரையில், மத்திய, மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துதல், கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவித்தல், கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளிக்க புதுமையான அணுகுமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தவும் நிர்வாக இடைவெளிகளை நிவர்த்தி செய்யவும் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்துடன் அமைச்சகம் தொடர்ந்து இணைந்து செயல்படுவதாக அவர் எடுத்துரைத்தார். கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சிகளை டாக்டர் ஆஷிஷ் குமார் பூட்டானி எடுத்துரைத்தார்.

ஆய்வுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் குறித்த ஒரு பிரத்யேக அமர்வு நடைபெற்றது.  இதில், மாநிலங்கள் தங்கள் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டன.

கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூட்டானி தனது நிறைவு உரையில், கூட்டுறவு அமைப்பின் முதுகெலும்பாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்தார். கிராமப்புற நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்த அவற்றின் முழுமையான கணினிமயமாக்கலின் அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213167&reg=3&lang=2

(Release ID: 2213167)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2213201) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , हिन्दी , Marathi , English , Urdu , Assamese , Gujarati , Telugu , Kannada