குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்எஸ்எம்இ-க்கள் நிதி அணுகலை மேம்படுத்துவதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 05 DEC 2025 11:56AM by PIB Chennai

எம்எஸ்எம்இ-க்கள் நிதி அணுகலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது

சமீபத்தில் கடன் பெறுவதற்கான  உத்தரவாத உச்சவரம்பு ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு முறையே ரூ. 50 லட்சம் திட்டச் செலவில் புதிய நுண் நிறுவனங்களை அமைப்பதற்கு 35% வரை மானியம் வழங்கப்படுகிறது.

கூடுதலாக, எம்எஸ்எம்இ-க்களுக்கான கடன் அணுகலை மேம்படுத்துவதற்காக, பிணையமில்லாத கடன் முறையை  செயல்படுத்துதல், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு ரூ.100 கோடி வரை கடன் தேவைப்படும் திட்டங்களுக்கு பரஸ்பர கடன் உத்தரவாதத் திட்டம், வங்கிகளால் கடன் முடிவுகளுக்கான காலக்கெடுவைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199257&reg=3&lang=1

Release ID: 2199257

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2203337) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Kannada