குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினத்தில் நவம்பர் 14 அன்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு உச்சிமாநாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கிவைக்கிறார்

Posted On: 13 NOV 2025 3:10PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2025 நவம்பர் 14 அன்று 30-வது இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு உச்சிமாநாடு 2025-ன் தொடக்க அமர்வில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். 

2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை ஆந்திரப்பிரதேச அரசு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீட்டின் எதிர்காலம் குறித்து விவாதிக்க தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய கூட்டாளர்கள் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.  மொத்தம் 45 அமர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 45 நாடுகளைச் சேர்ந்த 300 பங்கேற்பாளர்கள் உட்பட 2,500 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில்  பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID 2189616)

SS/IR/KPG/SE


(Release ID: 2189790) Visitor Counter : 6