வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுமங்கள் மற்றும் தொழில் நிறுவன சங்கங்களுடனான கூட்டம்

Posted On: 30 OCT 2025 10:46AM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், அக்டோபர் 29 அன்று புதுதில்லியில் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுமங்கள்  மற்றும் தொழில் நிறுவன சங்கங்களுடனான கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் வணிகத் துறை, வருவாய்த் துறை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை , ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுமங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் சங்கப்  பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த அமர்வின் போது, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்  மற்றும் வணிகத் துறை ஆகியவை 2025–26-ம் நிதியாண்டின் முதல் பாதியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள், ஏற்றுமதிகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட வரவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் அந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதி செயல்திறன் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கின.

தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், ஏற்றுமதியில்  சாதனைகள் மற்றும் நாட்டிலிருந்து ஏற்றுமதியை மேலும் மேம்படுத்துவதற்கான பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின.

ஜவுளி, ஆடை, பொறியியல், ரத்தினங்கள் மற்றும் நகைகள், மருத்துவ சாதனங்கள், மருந்துகள், சேவைகள்தொலைத்தொடர்பு, தோல், சிஐஐ, அசோசெம், நாஸ்காம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான வர்த்தக சூழலை வளர்ப்பதிலும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் மத்திய அமைச்சர் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் முயற்சிகளைப் பாராட்டினர்.

வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மேம்பட்ட உலகளாவிய சந்தை அணுகலை உருவாக்குவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் ஒரு வசதியான வர்த்தக சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை திரு பியூஷ் கோயல் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

***

(Release ID: 2184042)

SS/PKV/KR


(Release ID: 2184164) Visitor Counter : 8