இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மை பாரத் தளம் 2 கோடி பதிவுகளைக் கடந்தது

प्रविष्टि तिथि: 28 OCT 2025 5:06PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அதன் முதன்மையான இளைஞர் ஈடுபாட்டு முயற்சியான மேரா யுவ பாரத்-தின் (எனது இளைய பாரதம்) கீழ் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தத் தளம் 2 கோடிக்கும் அதிகமான பதிவுகளைத் தாண்டியுள்ளது. இந்த மைல்கல், 2047-ல் ஒரு வளர்ச்சியடைந்த  பாரதத்தை நோக்கிய நாட்டின் கூட்டுப் பயணத்தில் இந்திய இளைஞர்களின் வளர்ந்து வரும் உற்சாகத்தையும் பங்கேற்பையும் பிரதிபலிக்கிறது.

தேசிய ஒற்றுமை தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2023 அக்டோபர் 31 அன்று தொடங்கப்பட்ட மை பாரத், இந்தியாவின் இளைஞர்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய டிஜிட்டல் சூழல் அமைப்புகளில் ஒன்றாக விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. 15-29 வயதுடைய இளைஞர்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த, ஒரே இடத்தில் கிடைக்கும் தீர்வாக வடிவமைக்கப்பட்ட இந்தத் தளம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை இணைத்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பல்வேறு வாய்ப்புகளைக் கற்றுக்கொள்ள, சேவை செய்ய மற்றும் வழிநடத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, 2 கோடி பதிவுகளைத் தாண்டியது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று கூறினார். இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்கேற்பதற்கான இந்திய இளைஞர்களின் உற்சாகம், ஆற்றல் மற்றும் உறுதியைப் பிரதிபலிக்கிறது. மை பாரத் இளம் இந்தியாவின் இதயத் துடிப்பாக மாறியுள்ளது, அங்கு உற்சாகம் வாய்ப்பையும், சேவை நோக்கத்தையும் எதிர்கொள்கிறது  என்று குறிப்பிட்டார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183371

***

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2183479) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Kannada , English , Urdu , Marathi , Malayalam