ரெயில்வே அமைச்சகம்
பண்டிகைக் காலத்தில் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்
Posted On:
25 OCT 2025 8:11PM by PIB Chennai
பண்டிகைக் காலத்தில் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பண்டிகைக் காலம் முடியும்போது இந்த எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, பீகார், உத்தரப்பிரதேசத்தின் அருகிலுள்ள 30 முக்கிய நிலையங்கள் பெரிய ரயில் நிறுத்துமிடங்களைக் கொண்டுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், ரயில்வே உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முதலீடுகள், சிறந்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன. முன்பு சில நூறாக இருந்த சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை, இப்போது சாதனை எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. தண்டவாள கட்டுமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது. சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆண்டுக்கு 400–600 கி.மீ-ஆக இருந்த இந்த எண்ணிக்கை, இன்று ஆண்டுக்கு 4,000 கி.மீ.க்கு மேல் அதிகரித்துள்ளது.
அதன் பரந்த வலையமைப்பு, அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் மற்றும் பயணிகளின் வசதியில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்திய ரயில்வே ஒவ்வொரு பயணிக்கும் சிறப்பான சேவை செய்வதில் உறுதியாக உள்ளது. கூடுதல் ரயில்களை இயக்குவது முதல் தூய்மை, பாதுகாப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பது வரை, பண்டிகைக் காலத்தில் சீரான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கடின உழைப்பும், நாடு முழுவதும் பயணிகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நன்கு நிர்வகிக்கப்பட்ட பயணங்களை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2182512
***
AD/RB/RJ
(Release ID: 2182608)
Visitor Counter : 6