பிரதமர் அலுவலகம்
கரூர் அரசியல் கூட்டத்தில் நடந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்
Posted On:
27 SEP 2025 10:07PM by PIB Chennai
தமிழ்நாட்டின் கரூரில் இன்று நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாடு ஆதரவாக நிற்கிறது என்றும், தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதற்கு அரசு உறுதியளிக்கிறது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டின் கரூரில் அரசியல் கூட்டத்தின்போது நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."
----
(Release ID: 2172305 )
SS/VK/SG
(Release ID: 2181156)
Visitor Counter : 13
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam