எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

35-வது தேசிய எரிசக்திப் பாதுகாப்பு விருதுகளுக்கான விண்ணப்பங்களை எரிசக்தி திறன் அமைப்பு வரவேற்கிறது

प्रविष्टि तिथि: 15 OCT 2025 5:03PM by PIB Chennai

35-வது தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளுக்கான விண்ணப்பங்களை மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் அமைப்பு வரவேற்கிறது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2025 டிசம்பர் 14 அன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தன்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

தொழில்துறை, போக்குவரத்து, கட்டிடங்கள், எரிசக்தித் திறன் புதுமை கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எரிசக்தித் திறனில் சிறப்பான சாதனைகளை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பங்களை www.neca.beeindia.gov.in என்ற இணையதளத்தில் 2025 நவம்பர் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179463

 

***

AD/IR/AG/SH


(रिलीज़ आईडी: 2179653) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी