வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் பொது தளம்- மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 13 OCT 2025 5:09PM by PIB Chennai

புவிசார் மற்றும் உள்கட்டமைப்பு தரவுகளுக்கான அணுகலை பரவலாக்குவதற்கான பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் பொது தளத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார். புதுதில்லியில் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இன்று கலந்து கொண்டார்.

இந்த இணையதளம் தனியார் நிறுவனங்கள், ஆலோசகர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் முதலீட்டு முடிவுகளுக்கு மேம்பட்ட பகுப்பாய்வுகளைப் பயன்படுத்த உதவுகிறது. பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி-தகவல் நிறுவனத்தால் இந்தத் தளம் உருவாக்கப்பட்டு, தேசிய புவிசார் தரவு பதிவேட்டால் இயக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178521   

***

AD/IR/AG/SH


(रिलीज़ आईडी: 2178698) आगंतुक पटल : 37
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Malayalam