குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஜெய்ப்பூர் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் இரங்கல்
Posted On:
06 OCT 2025 2:41PM by PIB Chennai
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து திரு சி பி ராதாகிருஷ்ணன் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு நிகழ்ந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது இரங்கல். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் வலிமையைப் பெறவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID: 2175307 )
SS/IR/AG/KR
(Release ID: 2175395)
Visitor Counter : 8