பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புத்தூய்மை இயக்கம்

Posted On: 25 SEP 2025 10:26AM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவ தலைமையகத்தின் உணவுக்கூடத்தில் (கேன்டீன்) இன்று (25.09.2025) சிறப்பு தூய்மை இயக்கம் நடைபெற்றது. செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறும் தூய்மை இயக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது தூய்மை பணியாளர்களை கௌரவித்த அமைச்சர், மரக்கன்றுகள் நடும் இயக்கத்திலும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தூய்மை என்பது சுத்தத்தை மட்டும் குறிப்பதல்ல எனவும் அது ஒழுக்கத்தையும், பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கும் வாழ்க்கை முறை என்றும் கூறினார். தூய்மை நாகரீக சமூகத்தின் அடையாளம் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தளபதி ஜெனரல்  திரு அனில் சௌகான், ராணுவத் தலைமை தளபதி திரு உபேந்திர திரிவேதி, விமானப்படைத் தளபதி திரு ஏ பி சிங் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170987   

***

SS/PLM/AG/SH


(Release ID: 2171387) Visitor Counter : 4