பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாளில் அவரது தொலைநோக்குப் பார்வையை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
07 SEP 2025 4:37PM by PIB Chennai
ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாளில் அவரது தொலைநோக்குப் பார்வையையும், நமது சமூகத்திலும், ஆன்மிகத்திலும் அதன் தாக்கத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி, நினைவு கூர்ந்துள்ளார். " சமத்துவம், கருணை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் பற்றிய அவரது போதனைகள் பரவலாக எதிரொலிக்கின்றன", என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வை, நமது சமூகத்திலும், ஆன்மிகத்திலும் அதன் தாக்கம் ஆகியவற்றை நாம் நினைவு கூர்கிறோம். சமத்துவம், கருணை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் பற்றிய அவரது போதனைகள் பரவலாக எதிரொலிக்கின்றன. சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கான அவரது அழைப்பு தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது."
***
(Release ID: 2164492)
AD/PKV/SG
(रिलीज़ आईडी: 2164512)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam