பிரதமர் அலுவலகம்
ஓணம் பண்டிகையையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
Posted On:
05 SEP 2025 8:26AM by PIB Chennai
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "இந்தப் பண்டிகை ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கலாச்சார பெருமையின் சின்னமாகும். இந்தப் பண்டிகை நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தி, இயற்கையுடனான நமது பிணைப்பை மேலும் அதிகரிக்கட்டும் " என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்! இந்த அழகான பண்டிகை அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கொண்டுவரட்டும். கேரளாவின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும், வளமான மரபுகளையும் ஓணம் பண்டிகை பிரதிபலிக்கிறது. இந்தப் பண்டிகை ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கலாச்சாரப் பெருமையின் சின்னமாகும். இந்த விழா நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தி இயற்கையுடனான நமது பிணைப்பை அதிகரிக்கட்டும்."
*****
(Release ID: 2164043)
SS/PKV/SG
(Release ID: 2164147)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam