தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் திருநங்கைகள் உரிமைகள் குறித்த தேசிய மாநாட்டை புது டெல்லியில் செப்டம்பர் 4, 2025 அன்று நடத்துகிறது.
Posted On:
02 SEP 2025 1:07PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையம் , செப்டம்பர் 4, 2025 அன்று, புதுடெல்லியில் உள்ள இந்தியா ஹாபிடேட் சென்டரில் உள்ள ஸ்டெய்ன் ஆடிட்டோரியத்தில் திருநங்கையர் உரிமைகள் குறித்த தேசிய மாநாட்டை நடத்துகிறது. “இடங்களை மறுசீரமைத்தல், குரல்களை மீட்டெடுத்தல்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைந்து, அவர்களின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் அவர்கள் மாநாட்டின் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டில் அரசு அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்பார்கள். திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த சவால்கள் மற்றும் கொள்கை முன்னுரிமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். திருநங்கையர் பாதுகாப்பு சட்டம், 2019, ஸ்மைல் (SMILE) திட்டம் போன்ற சட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களின் அமலாக்கத்தை மாநாடு ஆய்வு செய்யும். மேலும், சட்ட அமலாக்க முகமைகளில் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
இந்தியாவில் திருநங்கைகளின் வரலாறு, கண்ணுக்குத் தெரியாத நிலையில் இருந்து அங்கீகாரம் நோக்கியும், தற்போது உள்ளடக்கம் நோக்கியும் நகர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, சுய அடையாளத்தை அடிப்படை உரிமையாக உறுதிசெய்து, திருநங்கைகளை “மூன்றாம் பாலினம்” என அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 திருநங்கையர் பாதுகாப்பு சட்டம் மற்றும் 2023-ல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விரிவான ஆலோசனை அறிக்கை ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு மேலும் வலு சேர்த்தன.
மாநாடு நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அமர்வில், ஸ்மைல் (SMILE) திட்டத்தின் கீழ் உள்ள கரிமா கிரேஹ் (Garima Greh) இல்லங்களை மேம்படுத்துவது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கள ஆய்வுகள் பகிரப்படும். இரண்டாவது அமர்வு, பாலின அடையாளமற்ற குழந்தைகள் மற்றும் வயதான திருநங்கைகளுக்கான நிறுவனப் பராமரிப்பு குறித்து விவாதிக்கும். மூன்றாவது அமர்வு, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சட்ட அமலாக்க கட்டமைப்பை உருவாக்குதல் குறித்தும், திருநங்கைகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கும். இறுதி அமர்வு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுக்கான வழிகள், வெற்றிக் கதைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும்.
***
(Release ID: 2163005)
SS/EA/KR/DL
(Release ID: 2163152)
Visitor Counter : 6