சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

प्रविष्टि तिथि: 18 AUG 2025 4:50PM by PIB Chennai

கடலோரப் பகுதிகள் மற்றும் அதன் சூழல் அமைப்புகளை பாதுகாக்கும் வகையில் 1991-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட  அறிவிக்கை மூலம் கடலோர ஒழுங்குமுறை மண்டல  வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய  அரசு அமல்படுத்தியுள்ளது.  இதன்படி மீனவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், வளர்ச்சி அடிப்படையிலான அறிவியல் கொள்கைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடலோர மண்டல மேலாண்மை திட்டங்கள், கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீவுகளுக்கான ஒழுங்குமுறை திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த தீவு மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157521

***

AD/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2157670) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu