பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 13 AUG 2025 4:24PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வேதனையடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்:” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2156056 )

AD/EA/SG


(Release ID: 2156112)