பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து மக்களுக்கும் பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 09 AUG 2025 8:20AM by PIB Chennai

மகாத்மா காந்தியின் எழுச்சிமிக்க  தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து துணிச்சலான மக்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மிகுந்த  நன்றியுடன் மரியாதை  செலுத்தியுள்ளார்.

அவர்களின் துணிச்சல், சுதந்திரத்திற்கான தாகத்தில்  எண்ணற்ற மக்களை ஒன்றிணைத்த நாட்டுப்பற்று என்னும்  தீப்பொறியை ஏற்றியது என்று திரு. மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"பாபுவின் உத்வேகமான தலைமையின் கீழ், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து துணிச்சலான மக்களையும் நாங்கள் மிகுந்த நன்றியுடன் நினைவுகூருகிறோம். அவர்களின் துணிச்சல், சுதந்திரத்திற்கான தாகத்தில் எண்ணற்ற மக்களை ஒன்றிணைத்த நாட்டுபற்று என்னும்  தீப்பொறியை ஏற்றியது."

*****

(Release ID: 2154529)

AD/SM/PKV/SG

 

 


(रिलीज़ आईडी: 2154596) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam