பிரதமர் அலுவலகம்
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மண்டியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
24 JUL 2025 11:03PM by PIB Chennai
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மண்டியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மண்டியில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது என்றும், இச்சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ₹ 2 லட்சமும், காயமடைந்தார்களுக்கு தலா ₹ 50,000 நிவாரண உதவி வழங்கப்படும்: பிரதமர்@நரேந்திரமோடி".
***
(Release ID:2148125)
AD/SV/AG/KR
(Release ID: 2149171)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada