உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யமுனை நதி புனரமைப்பு குறித்து புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார்

Posted On: 11 JUL 2025 6:50PM by PIB Chennai

யமுனை நதி புனரமைப்பு தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்  திரு. அமித் ஷா இன்று புதுதில்லியில் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் திரு. மனோகர் லால், மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல், தில்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா, மத்திய உள்துறை செயலாளர், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தொழில்துறை பிரிவுகளில் இருந்து அதிகரித்து வரும் மாசுபாட்டைத் தடுக்க தில்லி அரசு தொடர்ச்சியான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். தில்லியைத் தவிர, பிற மாநிலங்களிலிருந்து வரும் கழிவுகளின் ரசாயனங்களும் யமுனை நதியில் கலக்கிறது, எனவே இந்த அனைத்து மாநிலங்களும் யமுனை நதியை சுத்தம் செய்ய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார்.

 

நஜாப்கர் மற்றும் ஷாதராவின் முக்கிய வடிகால்களில் உயிரிவேதியியல் ஆக்ஸிஜன் தேவையை மேம்படுத்துவதற்கான செயல்முறையில் பணியாற்றுவது குறித்து அமைச்சர் வலியுறுத்தினார். தில்லியின் இரண்டு முக்கிய வடிகால்களான நஜாப்கர் மற்றும் ஷாதராவில் ட்ரோன் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அவர் வலியுறுத்தினார். ஆறுகளை சுத்தம் செய்ய தில்லி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மேலதிகமாக, தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.

 

யமுனையை சுத்தம் செய்வதிலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் (எஸ்டிபிக்கள்) திறனை அதிகரிப்பதிலும் அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தினார். 2028 ஆம் ஆண்டுக்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் திறனை ஒரு நாளைக்கு 1500 மில்லியன் கேலன்களாக அதிகரிக்க அவர் உத்தரவிட்டார். ஹரியானா, தில்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் யமுனையை  புனரமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவற்றின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் நீரை சோதிப்பதில் வழக்கமான தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் திரு ஷா கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144095

***

 

(Release ID: 2144095)

AD/RB/DL


(Release ID: 2144152)