பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவியை பிரதமர் அறிவித்துள்ளார்
Posted On:
05 JUL 2025 10:17AM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.07.2025) இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000-ம் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi)”
********
(Release ID: 2142406)
AD/TS/PLM/SG
(Release ID: 2142466)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam