உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவின் சங்கரெட்டியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 30 JUN 2025 7:31PM by PIB Chennai

தெலங்கானாவின் சங்கரெட்டியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை  அமைச்சர் திரு. அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:  \

தெலங்கானாவின் சங்கரெட்டியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட துயர விபத்தை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளைத் தொடர்கின்றனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”.

---

(Release ID 2140910)

AD/RB/DL


(Release ID: 2140950)