வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான திட்டக் கண்காணிப்புக் குழு மதிப்பாய்வு கூட்டம் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது

Posted On: 26 JUN 2025 12:01PM by PIB Chennai

ஜார்க்கண்ட், சிக்கிம், நாகாலாந்து, அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகப் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய முக்கிய விவகாரங்களை ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா தலைமையில் நடைபெற்றது. மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் அமைச்சகங்களுக்கு இடையிலான மற்றும் மாநில ஒருங்கிணைப்பு மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் திட்ட கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியது.

இந்தக் கூட்டத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11 குறிப்பிடத்தக்க திட்டங்களில் நிலவும் 18 பிரச்சனைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டன. இதற்கான மொத்த செலவு ரூபாய் 34,213 கோடியாகும். சிக்கிம் மாநிலத்தில் 02 திட்டங்களில் உள்ள 02 பிரச்சினைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இந்த திட்டங்களுக்கான மொத்த செலவுத் தொகை ரூபாய் 943.04 கோடியாகும். நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 544.65 கோடி ரூபாய் மதிப்பிலான 02 திட்டங்களில் 03 பிரச்சினைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டன. அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் இதில் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139767

***

AD/TS/SV/RR/KR


(Release ID: 2139797)