உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா மும்பையில் மாநில அளவிலான கூட்டுறவு தொழில்துறை மாநாட்டில் பங்கேற்றார்

Posted On: 20 JUN 2025 8:17PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று மும்பையில் மகாராஷ்டிர வர்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை சபையின்  புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்து, மாநில அளவிலான கூட்டுறவு தொழில்துறை மாநாட்டில் பங்கேற்றார். இந்த நிகழ்வில், மகாராஷ்டிர முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய கூட்டுறவு இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, இன்று, நாட்டில் தொழில், வணிகம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, கொள்கை வகுப்பதில் ஏற்படும் மாற்றங்களுடன், முழு பொருளாதாரமும் இப்போது உலகளாவியதாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கொள்கை வகுப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் செயல்படுத்தலில் அயராத முயற்சிகள் காரணமாக, இந்திய பாஸ்போர்ட்டின் உலகளாவிய நற்பெயரும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள வர்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை சபைகள் தங்கள் செயல்பாடுகள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. நாட்டின் பொருளாதாரம், கொள்கை உருவாக்கும் செயல்முறைகள், மாநில சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப வர்த்தக சபைகளின் செயல்பாட்டு முறைகள் மற்றும் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்து மேம்படுத்த தொழில்முறை நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று திரு ஷா வலியுறுத்தினார்.

 

இன்று நாம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டோம் என்று கூறிய அமைச்சர்,  இந்த சபை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றக் காலகட்டத்தைக் கண்டுள்ளது - நாம் நமது சொந்த முடிவுகளை எடுக்காமல், வேறொரு நாட்டின் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களைச் சார்ந்து இருந்த காலம் அது. அன்று முதல் இன்று வரை, 200 ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்களை விஞ்சி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறிவிட்டோம் என்று அவர் கூறினார். எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு, மகாராஷ்டிர வர்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை சபை தனது தொலைநோக்குப் பார்வையைப் பயன்படுத்தி அரசிடமிருந்து கொள்கைகள், சட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் கோருவதாகவும், வர்த்தகம், தொழில்கள் மற்றும் விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசிற்குத் தெரியப்படுத்துவதற்காகச் செயல்பட்டு வருவதாகவும் திரு. ஷா கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138139

 

***

(Release ID: 2138139)

AD/RB/DL


(Release ID: 2138167)