தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் சீர்மிகு முன்மாதிரியாக தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் காப்பீட்டு நிறுவனத்தின் சனத் நகர் வளாகம் உருவெடுத்துள்ளது
Posted On:
12 JUN 2025 1:17PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் ஐதராபாத் சனத் நகரில் அமைந்துள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி, உயர் சிறப்பு மருத்துவமனை என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விரிவாக்கத்திற்காக கூடுதலாக 11 ஏக்கர் நிலப்பரப்பில் 21 ஏக்கர் பரப்பளவிலான கட்டடத்துடன் அமைந்துள்ள இந்த வளாகம், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் குறைந்த செலவில் உயர்தர சுகாதாரப் பராமரிப்புகளை வழங்குவது என்பது மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு சான்றாக திகழ்கிறது.
72.6 லட்சத்திற்கும் அதிகமான காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சனத் நகரில் அமைந்துள்ள இஎஸ்ஐ வளாகம் வழங்கி வரும் சேவைகள் தேசிய அளவுகோலாக மாறியுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் 159 படுக்கை வசதிகள், டயாலிசிஸ் பிரிவில் 45 படுக்கை வசதிகள், 10 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், 5 மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அறைகள் உட்பட மொத்தம் 1,044 படுக்கை வசதிகளுடன், இந்த மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் சுகாதார பராமரிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் 3,200-க்கும் மேற்பட்டோர் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள இரட்டை மருத்துவமனைகளுக்கு 2019-ம் ஆண்டு முதல் 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் சிறப்பான செயல்திறன் கொண்ட தொழிலாளர் அரசு ஈட்டுறுதி என்ற விருது வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியம் மற்றும் ரத்த வங்கி, பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைக்கான தேசிய அங்கீகார வாரியம் சர்வதேச தரச்சான்று நிறுவனங்கள் போன்றவற்றின் சான்றிதழ்களைப் பெற்ற இந்த வளாகம், பொது சுகாதார நிர்வாகத்தில் முன்னணி மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
----
(Release ID: 2135886)
AD/TS/SV/KPG/KR
(Release ID: 2135964)