பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்த அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு முறையை அரசு மாற்றியமைத்துள்ளது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் சான்றாகும்: பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
10 JUN 2025 5:41PM by PIB Chennai
"கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒவ்வொரு பிரச்சனையிலும் அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு முறையை மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு முறையை மாற்றி அமைத்துள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூரின் போது உலக நாடுகள் இந்த மாற்றத்தைக் கண்கூடாகக் கண்டன," என்று உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஏற்பாடு செய்யப்பட்ட 'தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்' என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
ஜம்மு & காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய வரலாற்றில் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர் என்று பாதுகாப்பு அமைச்சர் விவரித்தார். பஹல்காம் சம்பவம் நாட்டின் சமூக ஒற்றுமையின் மீதான தாக்குதல் என்றும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத தளங்கள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை அழித்ததன் மூலம் பயங்கரவாதம் மற்றும் அதன் குற்றவாளிகளுக்கு எதிராக இந்தியா ஒரு பெரிய மற்றும் வலுவான நடவடிக்கையை எடுத்தது என்றும் அவர் கூறினார். "370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் அமைதி மற்றும் முன்னேற்றத்தின் சகாப்தத்திற்குள் நுழைந்தது. நமது அண்டை நாடுகளால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், காஷ்மீரில் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு ஆகியவை ஜம்மு-காஷ்மீரில் முன்னேற்றத்திற்கான அரசின் இடைவிடாத முயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் காஷ்மீருடன் இணைந்து 'தாமும் ஒரு இந்தியா' என்று கூறும்," என அவர் குறிப்பிட்டார்.
இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தாலும், பஹல்காமில் நடந்தது போன்ற பயங்கரவாத சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பது அவசியம் என்று திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். அரசு அளவில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அளவிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2135420)
AD/TS/IR/RR/KR/DL
(Release ID: 2135463)