கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை கட்டமைப்பதற்காக நார்வேயின் காங்ஸ்பெர்க்குடன் ஜிஆர்எஸ்இ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Posted On: 03 JUN 2025 4:01PM by PIB Chennai

நார்வே கப்பல் உரிமையாளர்கள் சங்கத்துடன் கடல்சார் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஆய்வு செய்தார்.

‘கப்பல் போக்குவரத்து மற்றும் பெருங்கடல் வணிகம்’ குறித்த அமைச்சர்கள் கலந்துரையாடலில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பங்கேற்று, ‘அனைவருக்கும் வளர்ச்சியை’ உறுதி செய்யும் பெருங்கடல் பற்றிய இந்தியாவின் தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நார்வேயின் காங்ஸ்பெர்க்குக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டுபவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா தனது முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை உள்நாட்டிலேயே கட்டுவதற்கு வழி வகுக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனோவால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கட்டும், இது அறிவியல் முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் குறிக்கிறது என்று தெரிவித்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவியல் கண்டுபிடிப்பை வளர்ப்பதற்கும், துருவ மற்றும் கடல் ஆராய்ச்சியில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும் ஒரு உறுதிப்பாடாகும் என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், உலகளாவிய கடல்சார் துறையின் தலைவர்களுடனான கடல்சார் உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நோக்கத்துடன், நார்வேக்கும், டென்மார்க்கிற்கும் ஐந்து நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சென்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133528

 

*** 

AD/SM/IR/KPG/KR


(Release ID: 2133567)