குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் பராகுவே அதிபர் திரு. சாண்டியாகோ பெனா பலாசியோஸைக் கௌரவிக்கும் விதமாக விருந்து அளித்தார்
Posted On:
02 JUN 2025 10:20PM by PIB Chennai
இந்தியாவிற்கு தமது முதல் அரசு பயணத்தை மேற்கொண்ட அதிபர் பெனாவை வரவேற்ற குடியரசு தலைவர் , இந்தியாவிற்கும் பராகுவேக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாகவும் நட்புரீதியிலும் இருந்ததாக கூறினார். இரு நாடுகளும் ஒரே கொள்கைகள் மற்றும் மதிப்புகளை நம்புகின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, கருத்து சுதந்திரம், அமைதி, இறையாண்மைக்கு மரியாதை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு. இரு நாடுகளும் முக்கியமானவை என்று தாங்கள் நம்பும் கொள்கைகளில் உறுதியாக நிற்கின்றன. மேலும் இந்தக் கொள்கைகள் நமது நாகரிக மதிப்புகள் மற்றும் வரலாற்று அனுபவங்களில் வேரூன்றியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை கடுமையாக கண்டித்ததற்கும் அதன் ஒற்றுமைக்கான செய்திக்கும் பராகுவே அரசுக்கு குடியரசு தலைவர் நன்றி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை போன்ற பலதரப்பு மன்றங்கள் உட்பட உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து ஆதரித்ததற்காக பராகுவேயை அவர் பாராட்டினார்.
இந்தியாவிற்கும் பராகுவேவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கண்டு குடியரசு தலைவர் மகிழ்ச்சி வெளியிட்டார். இருப்பினும், வர்த்தகம் மற்றும் வணிகத் துறைகளில் உறவுகளை விரிவுபடுத்துவதற்கு கணிசமான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உலக தெற்கின் ஒரு பகுதியாக, இந்தியாவும் பராகுவேயும் ஒரே மாதிரியான வளர்ச்சி சவால்களை எதிர்கொள்கின்றன என்று குடியரசு தலைவர் கூறினார். இந்தச் சவால்களை சமாளிப்பதற்கான நமது அணுகுமுறையும் மிகவும் ஒத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அதாவது, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்து, அதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துதலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், இந்தியா நிலையான வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை ஒரு உதவியாகப் பயன்படுத்துகிறது என்றும், தொழில்நுட்பங்களுக்கு சமமான அணுகல் மற்றும் 'டிஜிட்டல் பிளவைக்' குறைப்பது தேசிய முன்னுரிமை என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புத் துறையில் பராகுவேவுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.
உறவுகளை மேலும் வலுப்படுத்த மகத்தான ஆற்றல் இருப்பதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த வருகை உறவுகளை வலுப்படுத்தவும், செயல்பாடுகளுக்கான புதிய பகுதிகளைத் திறக்கவும் உதவும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
***
(Release ID: 2133428)
AD/SM/PKV/KPG/KR
(Release ID: 2133540)