பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தேசிய அனுபவ் விருதுகள் திட்டம், 2025 - ன் கீழ், 18.08.2025 - ம் தேதி அனுபவ் விருதுகளை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்குகிறார்
Posted On:
28 MAY 2025 5:22PM by PIB Chennai
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை, அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் / ஓய்வு பெற்ற ஊழியர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, மார்ச் 2015 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 'அனுபவ்' என்ற ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்பிறகு, ஓய்வுபெறும் / ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் அனுபவங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கவும் வகையில் ஆண்டுதோறும் விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 59 அனுபவ் விருதுகள் மற்றும் 19 ஜூரி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய அனுபவ் விருதுகள் திட்டம், 2025 தனித்துவமானது. மத்திய அரசு ஊழியர்களைத் தவிர, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றின் ஊழியர்களும் நாட்டைக் கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் திட்டத்தின் கீழ் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 01.04.2024 முதல் 31.03.2025 வரை வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவுகள் இந்தத் திட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.
2023 - ம் ஆண்டில் 30 அமைச்சகங்கள்/துறைகள்/அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, 42 அமைச்சகங்கள்/துறைகள்/அமைப்புகளிலிருந்து மொத்தம் 1459 எழுத்துப்பூர்வ பதிவுகள் வெளியிடப்பட்டன.
அதன்பிறகு, வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவுகளின் இரண்டு கட்டத் தேர்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம் 05 அனுபவ் விருது பெற்றவர்கள் மற்றும் 10 ஜூரி சான்றிதழ் வென்றவர்கள் இறுதி செய்யப்பட்டனர்.
அனுபவ் விருது பெற்றவர்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
நிலவளத் துறையின் கூடுதல் செயலாளர் திரு. ஹுகும் சிங் மீனா, எஸ்பிஐ வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திருமதி ஷாலினி காக்கர், பிரதமர் அலுவலக இணையமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரி திரு. எம். வெங்கடேசன், அஞ்சல் நிலையங்களின் மூத்த கண்காணிப்பாளர் திரு. ஓ. விருபக்ஷப்பா மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமைக் காவலர் திரு. சஜு பி.கே ஆகியோர் அடங்குவர்.
பிஹெச்இஎல் நிறுவன இயக்குநர் திரு. ஜெய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி திரு. ஜி வினோத் பி, விண்வெளித் துறையின் சிறந்த விஞ்ஞானி டாக்டர் ஜாலி தார், தொலைத்தொடர்புத் துறையின் சிறப்பு இயக்குநர் திருமதி சுனிதா செரோடத், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி திரு சாபு செபாஸ்டியன் எம், ஜல் சக்தித் துறையின் துணை இயக்குநர் திருமதி வேலகா குமாரி, இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையின் தலைமைக் காவலர் திருமதி சந்தோஷ் கவ்லி, சிஆர்பிஎஃப் துணை கமாண்டன்ட் திருமதி பாலம் சிங் ராவத், சிஆர்பிஎஃப் ஆய்வாளர் / மருந்தாளர் திருமதி எஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் சிஆர்பிஎஃப் துணைத் தலைவர் திருமதி ஷீலா ராணி போடார் ஆகியோர் ஜூரி சான்றிதழுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆவர்.
அனுபவ் விருதுகள் மற்றும் ஜூரி சான்றிதழ்கள் 18.08.2025 - ம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்குகிறார்.
***
(Release ID: 2132094)
AD/SM/SV/RR/DL
(Release ID: 2132150)